பெண்ணின் அனுமதி இன்றி வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆட் செய்த அட்மின்.. போலீஸ் எடுத்த திடுக் நடவடிக்கை!
மும்பையில் பெண்ணின் அனுமதியின்றி அவரின் வாட்ஸ் ஆப் எண்ணை குரூப் ஒன்றில் இணைத்த காரணத்தால் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மும்பை: மும்பையில் பெண்ணின் அனுமதியின்றி அவரின் வாட்ஸ் ஆப் எண்ணை குரூப் ஒன்றில் இணைத்த காரணத்தால் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தொழிலில்நுட்ப ரீதியாக பெண்களுக்கு எதிராக நிறைய பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் என எல்லா இடத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது.
அந்த விதத்தில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ் ஆப் அவரின் அனுமதி இன்றி வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளது.
புகார் அளித்தார்
இந்த குழுவில் பாலியல் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த எண் பெண்ணுடைய எண் என்று தெரிந்ததும், பாலியல் சம்பந்தமாக கொச்சையாக அவரிடம் சிலர் அந்த குழுவில் பேசி இருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
கைது செய்தனர்
இதையடுத்து அந்த குரூப் அட்மினை போலீஸ் வலைவீசி தேடியது. அந்த குழுவில் இருக்கும் நபர்களை கண்டுபிடித்து பின் அட்மினை கைது செய்தது. முஸ்தாக் அலி ஷேக் என்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த அட்மின்போலீசால் கைது செய்யப்பட்டார்.
என்ன விளக்கம்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஷேக் போலீசில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அந்த பெண்ணின் எண்ணை தெரிந்து இணைக்கவில்லை. என்னுடைய நண்பனின் எண் என்று நினைத்துதான் இணைத்தேன். ஆனால், இந்த பெண்ணின் எண் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அந்த குழுவில் வேறு பெண்கள் யாருமே இல்லை என்று கூறியுள்ளார்.
விசாரிக்க போகிறார்கள்
ஆனால் போலீஸ் இதை நம்பவில்லை. இதனால் தற்போது அந்த குழுவில் இருக்கும் மற்ற ஆண்களையும் போலீஸ் விசாரிக்க உள்ளது. அதேபோல் ஷேக்கின் போனில் இருக்கும் டெலிட் செய்யப்பட்ட தகவல்களை மீட்கவும் திட்டமிட்டுள்ளது .