கொரோனாவுக்கு சிகிச்சை: நடிகை ஐஸ்வர்யா ராய் மும்பை மருத்துவமனையில் அனுமதி
மும்பை: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியதாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மும்பை நானாவதியில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நாளை முதல் 4 நாட்களுக்கு வெளுத்து கட்டப் போகும் கனமழை
இதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சனின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்,. அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும் ஆராத்யாவும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.