மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர் அஜித்பவார்.. ஆதரவாளர்கள் ஒட்டியதால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர் அஜித்பவார்.. ஆதரவாளர்கள் ஒட்டியதால் பரபரப்பு

    மும்பை: மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர் அஜித் பவார் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பாராமதி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் சரத்பவாரின் அண்ணன் மகனாவார். சரத்தின் அரசியல் வாரிசாக கருதப்பட்டவர்.

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அஜித் பவார், தனது சொந்த கட்சியை முதுகில் குத்திவிட்டு பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து அவரை சட்டசபை என்சிபி எம்எல்ஏக்களின் குழு தலைவர் பதவியிலிருந்து அஜித் பவாரை சரத்பவார் நீக்கிவிட்டார்.

    தங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை!தங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை!

    முதல்வர்

    முதல்வர்

    கடந்த செவ்வாய்க்கிழமை மிகவும் ஆச்சரியமான நடவடிக்கையாக துணை முதல்வர் பதவியை அஜித் பவார் நீக்கினார். இதையடுத்து தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என கருதிய முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    செய்தியாளர்கள்

    செய்தியாளர்கள்

    இதையடுத்து பாஜக அரசு கவிழ்ந்தது. நேற்றைய தினம் அஜித்பவார் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் நான் என்சிபியில்தான் இருக்கிறேன். நான் அங்கிருந்து விலகிவிட்டேன் என எங்கேயாவது பார்த்தீர்களா என செய்தியாளர்களை எதிர் கேள்வி கேட்டார்.

    இறையாண்மை

    இறையாண்மை

    இந்த நிலையில் எம்எல்ஏவாக பதவியேற்ற அஜித்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் என்சிபி கட்சியின் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ என்ற முறையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டேன். நமது அரசியலமைப்பின் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டுள்ளேன். இறையாண்மையை காப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

    மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர்

    மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர்

    இந்த நிலையில் பாராமதியில் மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர் அஜித் பவார் என குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் திடீரென போஸ்டர்களை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் நீங்கள் எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்பது குறித்து தற்போது முடிவு செய்யலாம். உங்களை வருங்கால முதல்வராக எதிர்நோக்கி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவே காத்து கொண்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Ajit Pawar supporters project him as future CM of Maharastra and pasted posters in Mumbai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X