மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நம்பாதீங்க".. 10 நிமிஷம்.. மூச்சே விடாமல் பேசி விட்டு.. கிச்சனுக்கு போய்.. தூக்கில் தொங்கிய நடிகை!

மும்பையில் டிவி நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

மும்பை: மொத்தம் 10 நிமிஷம் மூச்சு விடாமல் ஃபேஸ்புக் லைவில் பேசிட்டு, கடைசியில் கிச்சனுக்கு போய் தூக்கு போட்டு தொங்கிவிட்டார் நடிகை அனுபமா.. "யாரையுமே நம்ப முடியல.. நீங்களும் யாரையுமே நம்பாதீங்க" என்ற கசப்பான வார்த்தையை உதிர்த்துவிட்டு சீரியல் நடிகை அனுபமா இறந்துவிட்டார்.

போஜ்பூரி பிரபல சின்னத்திரை நடிகை அனுபமா பதக்... இவர் பீகார் மாநிலம் புர்னியாவை சேர்ந்தவர்.. சீரியலில் நடித்து வருவதால், மும்பையில் தஹிசர் என்ற பகுதியில் தங்கி வந்தார்.

கடந்த 1-ம் தேதி இவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் வீடியோவை ஒன்றை போட்டார்.. மொத்தம் 10 நிமிஷம் அந்த லைவ் வீடியோவில் அனுபமா பேசுகிறார்.. அதில் நொந்து கொண்டு அவர் சொன்னதாவது:

70 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று.. பேய் மழை.. மும்பை மக்களே வெளியில் போகாதீங்க! 70 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று.. பேய் மழை.. மும்பை மக்களே வெளியில் போகாதீங்க!

தற்கொலை

தற்கொலை

"வாழ்க்கையில் எனக்கு சில பிரச்சனைகள் இருக்கு.. தற்கொலை செய்துக்கணும்போல இருக்கு என்று யார்கிட்டயாவது சொன்னால், அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர் அல்லது தோழியாக இருந்தாலும் சரி உங்களை அவங்ககிட்ட இருந்து தள்ளியிருக்க தான் சொல்வாங்க.... ஏன்னா, நீங்கள் செத்து போய்ட்டால், அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு அப்படி சொல்வாங்க.

அவமானம்

அவமானம்

அதுமட்டுமல்ல, உங்களை கிண்டல் செய்வாங்க.. இன்னொருத்தர் முன்னாடி அவமானப்படுத்துவாங்க.. அதனால தயவு செய்து நீங்க யாருமே உங்க பிரச்சனைகள் பற்றி யார்கிட்டயும் பேசாதீங்க.. முக்கியமா யாரையுமே நண்பரா நினைக்காதீங்க. ஆனால் அவர்கள் நம்பும் நபராக நீங்க இருங்க... ஆனா யாரையும் நம்ப வேணாம்.. இது தான் என் வாழ்க்கையில் நான் கற்றுகொண்ட பாடம்.

நடுராத்திரி

நடுராத்திரி

மக்கள் சுயநலவாதிகள்.. அடுத்தவங்களை பத்தி அவங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை" என்று அனுபமா பேசினார். இப்படி அவர் பேசியபோது நடுராத்திரி 12 மணி.. குட்பை, குட்நைட் என்று சொல்லிவிட்டு போனவர், அப்படியே கிச்சனுக்கு போய் தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.. ஆனால் உடனே விஷயம் வெளியே வரவில்லை. 2 நாள் கழித்துதான் இவர் இறந்ததே தெரியவந்துள்ளது.

தற்கொலை

தற்கொலை

பிறகு போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. தற்கொலைக்கு முன்பு வீடியோ போட்டு பேசியவர், ஒரு லெட்டரையும் எழுதி வைத்துள்ளார். அதில், பணப்பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். மனிஷ் ஜா என்பவர் இவரது டூவீலரை எடுத்து கொண்டு போய்விட்டாராம்.. அதையும் சொல்லி அந்த லெட்டரில் எழுதி உள்ளார். இப்போது விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து வடமாநிலங்களில் சின்னத்திரை, சினிமா நடிகர், நடிகைகள் தற்கொலைகள் செய்து கொண்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறது.

English summary
bhojpuri actress anupama pathak committed suicide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X