தலைகீழ நின்னாலும் "இந்த" நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெறாது.. பாஜக சவால்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே அரசு தோற்றுவிடும் என பாஜக சவால் விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் குழப்பங்களும் குளறுபடிகள் நடந்தேறியது. இந்த நிலையில் என்சிபி- காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிவசேனா கடந்த வியாழக்கிழமை மாலை ஆட்சியில் அமர்ந்தது. இதில் முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் 3 கட்சிகளை சேர்ந்த 6 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
ஜார்க்கண்ட் தேர்தல்: மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் .. பாலம் தகர்ப்பு.. மக்கள் பீதி!
இன்று கூட்டம்
உத்தவ் தாக்கரே வரும் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மதியம் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
166 எண்ணிக்கை
288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை. சிவசேனை கூட்டணி தங்களிடம் 166 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளது.
சந்திரகாந்த் பாட்டீல்
எனவே உத்தவ் தாக்கரே அரசு நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான சந்திரகாந்த் பாட்டீல் ஒரு சவால் விடுத்துள்ளார்.
பரபரப்பு
அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமான முறையில் நடத்தினால் உத்தவ் தாக்கரே நிச்சயம் வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.