மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுபான பாரில் ஆபாச நடனம்.. மாநகராட்சி அதிகாரிகள் 15 பேர் கைது

Google Oneindia Tamil News

மும்பை: தொழிலதிபர் கொடுத்த பார்ட்டிக்குப் போய் குடித்து விட்டு ஆபாசமாக குத்தாட்டம் போட்ட மாநகராட்சி அதிகாரிகள் உள்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மும்பையில் கோலபா என்ற இடத்தில் பிளாட்டினம் பார் ரெஸ்டாரென்ட் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த பாரில் ஆபாச நடனம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கே பத்துக்கும் மேற்பட்டோர் குடித்து விட்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

BMC official among 15 held in raid at Mumbai dance bar

தொழிலதிபர் ஒருவர் மும்பை மாநகராட்சியில் வேலை செய்யும் மூத்த அதிகாரிகள், விஐபிக்கள், பெண் அரசு ஊழியர்கள், கேட்டரிங் படித்தவர்கள் என சிலரை அழைத்து மிகப்பெரிய பார்ட்டி கொடுத்திருக்கிறார். அதில் பங்கேற்றவர்கள் குடித்து விட்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். அனைவரையும் கைது செய்து அள்ளிக்கொண்டு போன காவல்துறையினர் மகாராஷ்டிரா ஹோட்டல்ஸ் எஸ்டாபிளிஸ்மென்ட் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆபாச படங்களை வைத்து பிளாக்மெயில் செய்த காதலன் - ஆள் வைத்து கடத்திய டென்னிஸ் வீராங்கனை கைதுஆபாச படங்களை வைத்து பிளாக்மெயில் செய்த காதலன் - ஆள் வைத்து கடத்திய டென்னிஸ் வீராங்கனை கைது

தொழிலதிபர் கொடுத்த பார்ட்டிக்குப் போனவர்கள் சிறைக்கு போவார்களா என்ன?அதுவும் அரசு உயர் அதிகாரிகள் சிறைக்கு செல்லும் முன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

English summary
The Brihanmumbai Municipal Corporation senior official with 15 person were arrested following a raid on a dance bar in Colaba at South Mumbai police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X