இது நம்ம ஆளு.... மகா. அரசுடன் மோதும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தந்த பாஜக அரசு
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் மகாராஷ்டிரா அரசுடன் மல்லுக்கட்டி வரும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மத்திய பாஜக அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 24-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
ரஷ்யா தந்த "சீக்ரெட் விஷம்".. ஐரோப்ப நாடுகளை ஒன்று திரட்டும் ஜெர்மனி.. உருவானது எதிர்பார்க்காத மோதல்
களத்தில் கங்கனா
சுஷாந்த் சிங் மரண வழக்கில் தொடக்கம் முதலே மகாராஷ்டிரா அரசுக்கும் பீகார் அரசுக்கும் மோதல் இருந்தது. இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணத்தை முன்வைத்து நடிகை கங்கனா ரனாவத் பல பகீர் குண்டுகளை வீசினார்.
போதைப் பொருளும் பாலிவுட்டும்
பாலிவுட் விருந்துகளில் கொக்கைன் போதைப் பொருள்தான் பிரதானம்... பார்ட்டிகளில் போதைப் பொருள் கலந்துதான் கொடுப்பார்கள். பாலிவுட்டுக்குள் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நுழைந்தால் பல டாப் ஹீரோக்கள் கம்பி எண்ணுவார்கள் என அதிரடியாக ட்வீடர் போட்டார் கங்கனா. இதனையடுத்து பாலிவுட் பக்கம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இறங்கி வேட்டையாடி வருகின்றனர்.
மகா. அரசுடன் மோதல்
அத்துடன் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கங்கனா ரனாவத் குறித்து அதன் ஆசிரியர் சஞ்சய் ராவத் காட்டமாக எழுதினார். இதற்கு பதில் தந்த கங்கனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல மும்பை இருக்கிறது என பொளேர் பதிவிட்டார். இதனால் சிவசேனா மகளிர் அணியினர் போராட்ட களத்தில் குதித்தனர். உடனே மகாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ்முக், கங்கனா மகாராஷ்டிராவில் வாழ உரிமை இல்லாதவர் என்றார்.
ஒய் பிளஸ் பாதுகாப்பு
இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவும் மும்பையும் உங்க சொத்து இல்லை- நான் மும்பைக்கு 9-ந் தேதி வருகிறேன்.. என்ன செய்வீர்கள் என எகிறினார் கங்கனா ரனாவத். இதனையடுத்தே தற்போது கங்கனா ரனாவத்துக்கு தற்போது மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.