உலக மக்களை மீண்டும் மிரள வைக்கும் கொரோனா.. 54 கோடி மக்கள் பாதிப்பு - 63 லட்சம் பேர் மரணம்
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 54,01,36,71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 51,27,22,331 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 63,30,785 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 36,239 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 54 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 3,82,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54,01,36,712 பேராக உயர்ந்துள்ளது.
ஆட்டத்தை மெதுவாக ஆரம்பித்த கொரோனா! தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது! உஷார் நிலையில் மத்திய அரசு!
கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,92,104 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 51,27,22,331ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 929 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 63,30,785 பேராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. 6,056 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,32,19,491 பேராக உயர்ந்துள்ளது. 5,24,757 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 39,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,73,05,419 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,35,828 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.