கொரோனா.. மகாராஷ்டிராவில் 2 லட்சம் பேர் பாதிப்பு.. நாடு முழுக்க 6.7 லட்சம் பேர் பாதிப்பு.. அதிர்ச்சி!
மும்பை: மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 2 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 2,00,064 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
நாடு கொரோனா காரணமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22809 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவில் 672695 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2447005 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள்.
24 மணி நேரத்தில் 14326 பேர் குணமடைந்து உள்ளனர். 408645 பேர் மொத்தமாக குணமடைந்து உள்ளனர். 24 மணி நேரத்தில் 610 பேர் பலியாகி உள்ளனர். 19279 பேர் மொத்தமாக இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7074 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 2 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 2,00,064 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் அங்கு 8697 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னையில் அதிரடி திருப்பம்.. மற்ற மாவட்டங்களில் மோசம்.. தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா!
கடந்த 24 மணி நேரத்தில் 295 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 82237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 4000+ பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. 1 லட்சம் பேருக்கும் அதிகமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 107001 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1842 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இதேபோல் 97200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 3004 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 35398 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 1926 பேர் பலியாகி உள்ளனர்.