நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா உக்கிரம்- 97 பேருக்கு பாதிப்பு
மும்பை: நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இம்மாநிலத்தில் கொரோனாவால் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் மகாராஷ்டிராவில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்தம் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 30க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்னய்யா தேசம் இது.. கைதட்ட சொன்னது ஒரு குத்தமா? சல்லி சல்லியாக அடித்து நொறுக்கப்பட்ட சுய ஊரடங்கு
பஞ்சாப் மாநிலத்தில் 21 பேரும் குஜராத்தில் 18 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.