மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்!

வளர்ப்பு தந்தையை கொன்ற மகள், காதலன் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

மும்பை: சூட்கேஸில் இருந்து கால் ஒன்று வெளியே நீட்டி கொண்டிருந்தவாறு மும்பை பீச்சில் மிதந்து வந்ததை கண்டதும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. சூட்கேஸை திறந்தால் கண்ணில் பட்டது ஆணுறுப்புதான் என்பது அடுத்த அதிர்ச்சி!

மும்பை மாகிம் பீச்சில் போன 4-ம் தேதி, வழக்கம்போல் சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரில் சூட்கேஸ் ஒன்று மிதந்து வந்தது... அதில் ரத்தம் வழிய கால்கள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.

daughter killed father due to love issue in mumbai

விரைந்து வந்த போலீசார், சூட்கேஸை கைப்பற்றி அதை திறந்து பார்த்தனர். அப்போது அதில் கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், ஆணின் மர்ம உறுப்புகள் கிடந்தன. ஆண் சடலத்தை இப்படி துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொன்று ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, அதனை சூட்கேஸில் வைத்துள்ளனர்.

இந்த உடல் பாகங்களுக்கு மேல் துணிகளும் இருந்தன. அதில் ஒன்றுதான் அந்த ஸ்வெட்டர்.. மற்ற துணிகளை விட்டுவிட்டு போலீசார் ஸ்வெட்டரை மட்டும் வெளியே எடுத்து பார்த்தனர்.. அதில் ஆல்மோஸ் மென்ஸ் வியர் என்ற டெய்லர் கடையின் பெயர் இருந்தது. இது ஒன்று போதுமே நம் போலீசாருக்கு.. இதை வைத்தே அந்த கடையை விசாரிக்க ஆரம்பித்தனர்.. அதன்படி, அந்த கடையும் கண்டுபிடித்தனர்.. ஸ்வெட்டர் பற்றி விசாரித்ததற்கு, கொலை செய்யப்பட்டவரின் பெயரும் அட்ரசும் கிடைத்துவிட்டது.

இப்போது இதை வைத்து, சோஷியல் மீடியாவில் தேட ஆரம்பித்தனர்.. குறிப்பாக ஃபேஸ்புக்கில் தேடியபோது, இறந்தவரின் போட்டோ கிடைத்தது.. அந்த போட்டோவிலும் இதே ஸ்வெட்டர்தான் போட்டுக்கொண்டு இருந்தார்... அவர் பெயர் பெனட் என்பதும் வயது 59 என்பதும் தெரியவந்தது.

இப்போது, பெனட் வீட்டுக்கு போலீசார் விரைந்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்தது.. அக்கம் பக்கம் விசாரித்ததற்கு, பெனட்டுக்கு 19 வயதில் ஒரு வளர்ப்பு மகள் இருக்கிறார், பெயர் ஆரத்யா என்றும் சொன்னார்கள்.

வளர்ப்பு தந்தை இறந்த நிலையில் ஆரத்யா ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்தது.. இதையடுத்து ஆரத்யாவை போலீசார் தேட ஆரம்பித்தனர்.. இறுதியில், ஆரத்யாவை கைது செய்தனர். அவருடன் 16 வயது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

நண்பா! நான் பிழைக்க மாட்டேன்.. என் குடும்பத்தை பார்த்து கொள்.. இறக்கும் முன் டெல்லி இளைஞர் கண்ணீர்! நண்பா! நான் பிழைக்க மாட்டேன்.. என் குடும்பத்தை பார்த்து கொள்.. இறக்கும் முன் டெல்லி இளைஞர் கண்ணீர்!

இந்த 16 வயது சிறுவன் இதே பகுதியை சேர்ந்தவன்.. ஆரத்யா அவரை காதலித்துள்ளார்.. இந்த விஷயம் வளர்ப்பு தந்தைக்கு தெரியவும் கண்டித்துள்ளார்... மேலும் மகளுக்கு பெனட் பாலியல் தொல்லையும் தந்துள்ளார்.. இதனால்தான் அப்பாவை கொலை செய்ய முடிவு செய்தார் ஆரத்யா.. போன 26-ம் தேதி, 16வயது காதலனுடன் சேர்ந்து, பெனட்டை கம்பால் தாக்கியும்.. கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த சடலத்துடன் 3 நாட்கள் இருந்துள்ளார் ஆரத்யா.. இதன்பிறகு 3 நாள் கழித்து சடலத்தை துண்டு துண்டாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு... 3 சூட்கேஸ்களில் அடைத்து, மாகிம் பீச்சில் வீசியிருக்கிறார். இதையடுத்து ஆரத்யாவும், 16 வயது காதலனும் போலீசாரின் பிடியில் இப்போது உள்ளனர்.

English summary
Mystery of Body in Suitcase: adopted daughter murdered father, and arrested including her 16 year old boyfriend by mumbai police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X