ரகிட ரகிட.. தமிழ் மக்களோட ராஜாவா நாங்க வாழுறோம்.. கண்டிப்பா ஐபிஎல்லை ஆளுவோம்- ஹர்பஜன் ட்வீட்
மும்பை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை இந்தியன்ஸுடன் மோதிய நிலையில் ஹர்பஜன் சிங் ரகிட ரகிட பாடலை வார்த்தைகளை மாற்றி போட்டு ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று அபுதாபியில் தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி வாகை சூடியது.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிகள் குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ரகிட ரகிட.ஊ @IPL போட்டிய துபாய் ல நெடத்துனாலும் சந்தோசமா இருப்போம் @ChennaiIPL கொடி அங்கயும் பறக்க விசில் காத கிழிக்க உல்லாசமா இருப்போம்.
தமிழ் மக்களோட ராஜாவா நாங்க வாழுறோம் கண்டிப்பா #IPL யை ஆளுவோம். சிங்க பாய்ச்சல் என ஹர்பஜன் தெரிவித்தார். நடிகர் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட பாடலின் வரிகளை நீக்கிவிட்டு ஐபிஎல் போட்டி தொடர்பா வரிகளை போட்டு ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்துள்ளதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள்.