மும்பையில் கொட்டுகிறது கன மழை.. ரயில், விமான சேவைகளில் பாதிப்பு
மும்பை: மும்பையில் இன்று பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த நகரத்திற்கு செல்லக்கூடிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை நேற்றுமுன்தினம் கேரளாவில் ஆரம்பித்துள்ளது. இந்த மழை படிப்படியாக கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் இம்முறை கேரளாவில் பருவமழை ஆரம்பித்த இரண்டே நாட்களில் மும்பையிலும் மழை கொட்டத் தொடங்கிவிட்டது.
இன்று மாலை முதல் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதற்கும், கிளம்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
It's Officially Monsoon in Mumbai!!! #mumbairains #mumbaimonsoon pic.twitter.com/BUwop9RjWu
— Monica Waldia (@monicawaldia) June 10, 2019
போதிய வெளிச்சமின்மை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதேபோல மும்பை செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.