பெண்குழந்தை பெற்றதால் ஆத்திரம்.. சிலிண்டரைத் தூக்கி மனைவியை அடித்த கணவர் கைது!
சிலிண்டரால் மனைவியைத் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மும்பை: பெண் குழந்தை பிறந்தது தொடர்பான வாக்குவாதத்தில் சிலிண்டரால் தாக்கி மனைவியை சிலிண்டரைக் கொண்டு கடுமையாகத் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் அல்பேஷ் (30). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அவ்னி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்தாண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அல்பேஷ் ஆண் குழந்தையை பெரிதும் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் அவ்னியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தீபாவளியை ஒட்டி கடந்த 5ம் தேதி அல்பேஷ், அவ்னி மற்றும் அவர்களது ஒரு வயது குழந்தை துணி வாங்க கடை வீதிக்குச் சென்றுள்ளனர். அப்போதும் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் இருந்த அல்பேஷ், வீட்டிற்கு வந்ததும் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். பின்னர் கிரிக்கெட் பேட்டால் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவ்னி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், எட்டு நாள் சிகிச்சை அளித்தும் தொடர்ந்து அவ்னியின் நிலை மோசமாகவே இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அல்பேஷைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.