நான் இன்று பதவி ஏற்கவில்லை.. 3 கட்சிகளில் இருந்தும் தலா 2 பேர் மட்டும் பதவியேற்பு: அஜித் பவார்
மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் போது சிவசேனா, என்சிபி, காங்கிரஸின் 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என அஜித் பவார் கூறியுள்ளார். ஆனால் தாம் இன்று பதவி ஏற்கவில்லை எனவும் அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதற்காக சிவாஜி பூங்காவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தவ் தாக்கரே பதவி ஏற்கும் போது யார்? யார்? பதவி ஏற்பார்கள் என்கிற விவாதமும் களைகட்டி வருகிறது.
குறிப்பாக்க அஜித் பவார் மீண்டும் துணை முதல்வாரா? என்பது மகாராஷ்டிரா அரசியலின் மைய விவாதம். இதற்கு பதில் அளித்துள்ள அஜித் பவார், இன்று நான் பதவி ஏற்கவில்லை. 3 கட்சிகளில் இருந்தும் தலா 2 பேர் பதவி ஏற்கின்றனர் என்றார்.
மேளதாளத்துடன் ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் வரவேற்பு கொடுத்த சிவசேனா.. விழாவிற்காக புத்தம் புதிய லுக்!
அதேபோல் என்சிபியின் மற்றொரு மூத்த தலைவரான பிரபுல் பட்டேல், இன்று 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். துணை முதல்வர் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.