இந்தியாவின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மும்பையில் காலமானார்
மும்பை: நாட்டின் முதல் பெண் டிஜிபியான காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மும்பையில் உடல் நலக்குறைவால் திங்கள் அன்று உயிரிழந்தார்.
1973ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர் காஞ்சன் சவுத்ரி. இவர் கடந்த 2004ல் உத்தரகாண்ட் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை காஞ்சன் சவுத்ரி பெற்றார்.
சுமார் 3ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றி காஞ்சன் சவுத்ரி, கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார்
அதன்பிறகு அவர் அரசியலில் இறங்கி சாதிக்கும் ஆர்வத்துடன் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பாக கடந்த 2014ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு தோல்வியே கிடைத்தது.
இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்து காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மும்பையில் உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.
प्रदेश की पूर्व DGP श्रीमती कंचन चौधरी भट्टाचार्य, 1973 बैच की IPS अधिकारी, जो कुछ समय से बीमार चल रही थी, के निधन पर #UttarakhandPolice उनके परिजनों के प्रति शोक संवेदना व्यक्त करते हुए उत्तराखंड पुलिस में उनके द्वारा दिए गए अभूतपूर्व योगदान को याद करती है।@IPS_Association pic.twitter.com/dmk3IRthg6
— Uttarakhand Police (@uttarakhandcops) August 26, 2019
காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உத்தரகாண்ட் காவல்துறை நேற்று டுவிட் பதிவினை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் காஞ்சன் சவுத்ரி காவல்துறையில் ஆற்றிய அற்புதமான பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளார்கள்.
We mourn the demise of one of our icons, the first lady DGP and second lady IPS officer of India, Kanchan Chaudhary Bhattacharya. An officer with sterling qualities of head and heart, she had an illustrious career, adorned with many firsts and awards. #RIPKanchanChaudharyMaam pic.twitter.com/uslR2Lj6dT
— IPS Association (@IPS_Association) August 27, 2019
ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளது.