மோடி, அமித்ஷாவின் திமிரை அழித்துவிட்டது ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள்: என்சிபி நவாப் மாலிக்
மும்பை: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது திமிரை ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் அழித்துவிட்டன என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம், காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி அதிக இடங்கள கைப்பற்றி உள்ளது. பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது.
இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக என்சிபி மூத்த தலைவர் நவாப் மாலிக் தமது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது திமிரை ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் அழித்துவிட்டன என்றார்.
இதேபோல் சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் மனிஷா காயண்டே கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்தது போல ஜார்க்கண்ட்டிலும் அதிகாரத்தை பாஜக இழந்துவிட்டது. அமித்ஷா மற்றும் பாஜக மீதான நம்பிக்கையை ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
500 ஓட்டுதான் வித்தியாசம்.. யார் வேண்டுமானாலும் வெல்ல முடியும்.. 5 தொகுதிகளில் அதிரிபுதிரி பரபரப்பு
வளர்ச்சி என்ற பெயரில் முன்னர் பாஜக அரசியல் செய்தது. இப்போது உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப மக்களின் உணர்வுகளுடன் விளையாடி வருகிறது பாஜக என்றார்.