சாதியை சொல்லி கேவலப்படுத்திய சீனியர் பெண் மிருகங்கள்.. வேதனையில் தற்கொலை செய்த ஜூனியர் டாக்டர்
மும்பை: இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ இடம் பெற்ற பழங்குடியின மருத்துவ மாணவி ஒருவரை, 3 பெண் மிருகங்கள் (மருத்துவர்கள்) வார்த்தைகளால் சித்ரவதை செய்ததால் அந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள இந்த கொடூரத்தில் தொடர்புடைய, 3 பெண் மிருகங்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாயல் சல்மான் தாத்வி என்ற 26 வயது பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவி தான் தற்கொலை செய்து கொண்டுள்ளவர். முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர்ந்த இவரை, இவரது சாதியை சொல்லியும், இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வந்ததை சுட்டிக்காட்டியும் 3 பெண் மிருகங்கள் மிக தரக்குறைவாக தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
சீனியர்களான ஹேமா ஆஜா, பக்டி மேகர் மற்றும் அங்கிதா கண்டலிவால் இந்த மூன்று மிருகங்களும் தான் தாத்வியின் சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வாட்ஸ் அப் குரூப்பிலும் குறிப்பிட்ட மாணவியின் சாதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து அவர்கள் பதிவிட்டு விமர்சித்துள்ளனர்
இதனால் கடும் வேதனைக்கும் மனஉசைச்சலுக்கும் ஆளான அந்த பழங்குடியின மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தாத்வியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்
இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அந்த மாணவியின் தாய் தற்கொலை செய்து கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தாத்வி என்னிடம் போனில் பேசினாள். அப்போதுதமக்கு 3 பெண் மருத்துவர்கள்( மிருகங்கள்) தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாகவும் கூறி அழுதாள் என்றார்
பெற்றோரின் புகாரையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான 3 பெண் மிருகங்களிடமும், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.