மகாராஷ்டிராவில் செம்ம பெர்பாமென்ஸ் காட்டி பாஜக-சிவசேனா அமோகம் ... காங்கிரசுக்கு பெரும் சோகம்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 111 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் சரத்யாதவ் தலைமையிலான தேசியவாத காஙிகரஸ் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. அதேபோல் பாஜக சிவசேனா கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில் பாஜக சிவசேனா கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'
இதன் மூலம் மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசுக்கு அங்கு பெரும் பலம் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூர் தொகுதியிலும், மத்திய இணையமைச்சர் சுபாஷ் பூம்ரே துலே தொகுதியிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.