மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2940 பேருக்கு கொரோனா- கேரளாவிலும் 42 பேருக்கு பாதிப்பு!
மும்பை/ திருவனந்தபுரம்: மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபப்ட்டது. இதே போல் கேரளாவிலும் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,24,462. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 51,687. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,712 ஆக அதிகரித்திருக்கிறது.
லாக்டவுன்: அனைத்து குடும்பங்களுக்கும் 10 மாதங்களுக்கு ரூ7,500 வழங்க 22 எதிர்க் கட்சிகள் வலியுறுத்தல்
மும்பையில் அதிகம்
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். இங்கு வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,582 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் ஒரே நாளில் 1751 பேருக்கு கொரோனா உறுதியானது. மும்பையில் மொத்தம் 27,251 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1517.
பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் பாகிஸ்தானும் லாக்டவுனை அமல்படுத்தியிருந்தது. கடந்த 16-ந் தேதி முதல்தான் பாகிஸ்தானில் விமான சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் மேலும் 20 பேரின் உடல்கள் விபத்து பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில் இந்த விமான விபத்தில் மொத்தம் 66 பேர் பலியாகி உள்ளதாக சிந்து மாகாண அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
4 பேர் மீட்பு
இதனிடையே இந்த விமான விபத்தின் இடிபாடுகளில் இருந்து 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் விமானத்தில் பயணம் செய்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் தங்களது உறவினர்களிடம் தொலைபேசியில் பேசியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் பஞ்சாப் வங்கியின் தலைவர் ஜாபர் மசூத்தும் ஒருவர்.
எஞ்சியவர்கள் கதி என்ன?
விமானத்தில் பயணித்த 107 பேரில் 66 மரணித்துவிட்டனர். 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் கதி என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. இடிபாடுகளை முழுமையாக அகற்றிய பின்னர்தான் எஞ்சியவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.