பாஜக-சிவசேனா தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு- உத்தவ் தாக்கரே
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பாஜகவும் சிவசேனாவும் தலா 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்தன. ஆனால் பாஜக திடீரென சிவசேனாவுக்கான தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்தது.
இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருகட்சிகளும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும். தொகுதி பங்கீட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.