மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்குப் பின் அமைச்சரவையில் முஸ்லிம்கள்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் 3 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 1960-ம் ஆண்டு முதல் அமைச்சரவைகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வந்தது. மாநில மக்கள் தொகையில் 11.5% முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
இதனால் அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1960-ம் ஆண்டு முதல் 2014 வரை 64 முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்களில் 31 பேர் கேபினட் அமைச்சர்கள்; 33 பேர் துணை அமைச்சர்கள். 1995-ல் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த போது கூட ஷபீர் ஷேக் என்கிற முஸ்லிம் அமைச்சராக்கப்பட்டார்.
ஆனால் 2014-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் முதல் முறையாக முஸ்லிம்களுக்கான அமைச்சரவை பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. 2014 சட்டசபை தேர்தலில் 9 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போதைய தேர்தலில் 10 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களாகி உள்ளனர்.
2019ல் புது ரூபம் எடுத்த போராட்டக் களம்.. கோலம் போட்டு அதிர வைத்த மக்கள்..!
இம்முறை 4 முஸ்லிம்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் கேபினட் அமைச்சர்கள்; ஒருவர் துணை அமைச்சர். இதேபோல் பிற சிறுபான்மை மதத்தினரும் மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம் வேண்டும் என்கிற குரலை வெளிப்படுத்துகின்றனர்.
1995-ம் ஆண்டு முதல் பார்சி சமூகத்தினருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. 1978-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்கிற குமுறலும் மகாராஷ்டிராவில் இருக்கிறது.