சிவசேனாவுடன் இணைவதா? வேண்டாமா? என்சிபி - காங். இன்று கடைசி கட்ட ஆலோசனை.. என்ன நடக்கும்?
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று கடைசி கட்ட ஆலோசனை செய்ய உள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று கடைசி கட்ட ஆலோசனை செய்ய உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நிகழ்ந்து வந்த அரசியல் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை.
பாஜக சிவசேனா இடையில் இன்னும் உடன்படிக்கை எட்டப்படவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் சிவசேனாவுடன் சேராமல் காலம் தாழ்த்தி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை.. சென்னையிலும் செம.. எங்கெல்லாம் பெய்கிறது?
நிலை என்ன
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நேற்று எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது. ஆனால் நான்கு கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் ஏற்படவில்லை.
இன்று ஆலோசனை
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். டெல்லியில் இன்று நடக்கும் மீட்டிங் இறுதிக்கட்ட மீட்டிங்காக இருக்கும் என்கிறார்கள். இன்று நடக்கும் ஆலோசனையில் பெரும்பாலும் இறுதி முடிவு எடுக்கப்படும். மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
என்ன பெயர்
இந்த கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டால் பெரும்பாலும் அதற்கு மகா சிவா அகாடி என்று பெயர் வைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால், சோனியா காந்தி, ஏ கே அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தலைவர்கள்
அதேபோல் சிவசேனா தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிவசேனா கட்சிக்கு முதல்வர் பதவியை கொடுக்கலாமா? அப்படி செய்தால் எம்எல்ஏக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று இன்று விவாதம் நடக்க உள்ளது.