அதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.. நல்ல பிளான் இருக்கு.. சோனியாவிற்கு அறிவுறுத்தும் மூத்த தலைகள்!
சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க கூடாது, அது மிகப்பெரிய தவறான முடிவாக மாறும் என்று அரசியல் வல்லுநர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
மும்பை: சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க கூடாது, அது மிகப்பெரிய தவறான முடிவாக மாறும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அரசியல் வல்லுநர்கள் சோனியா காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா இன்று இரவு ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் இன்று மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார்.
பொறுமையாக இருங்கள்.. நேரம் வரும்.. திடீரென மகாராஷ்டிராவை விட்டுக்கொடுத்த பாஜக.. என்ன பின்னணி?
வேறு வேறு கட்சி கிடையாது
இந்த நிலையில் சிவசேனாவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தால் அது மிகப்பெரிய தவறாக மாறும். காங்கிரஸ் கட்சியை மகாராஷ்டிராவில் படுகுழிக்கு அந்த முடிவு தள்ளும். சிவசேனா கட்சி வேண்டுமானால் இதில் வளரலாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற இமேஜும் இதனால் போய்விடும் என்று கூறுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியே காணாமல் போகும்
சிவசேனா சிறிய கட்சியாக இருந்த போதே அவர்களுடன் கூட்டணி வைத்து, காங்கிரஸ் முதல்வர்கள்தான் அவர்களை வளர்த்துவிட்டார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி மோசமாக குறைந்தது. தற்போது மீண்டும் அவர்கள் முதல்வராக அனுமதி அளித்தால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.
வாக்கு போகும்
அதேபோல் சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்தால் அடுத்த சட்டசபை தேர்தலில் நிறைய குழப்பங்கள் வரும். அதற்கு தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியே நீடிக்கலாம். பாஜக சிவசேனா இப்போது சேர வாய்ப்பில்லை. அதனால் அவர்களின் வாக்குகள் பிரியும். இது சட்டசபை தேர்தல் வந்தால் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு உதவும்.
மிக மோசமாகும்
பாஜக சிவசேனா கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால் 40 இடங்களை கூட வெல்லாது. அதனால் இப்போது ஆட்சிக்கு ஆதரவு தராமல் பொறுமையாக தேர்தலை சந்தித்தால், கண்டிப்பாக தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். மீண்டும் கர்நாடகாவில் செய்த தவறை செய்ய வேண்டாம் என்று சோனியாவிற்கு மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.