நல்ல வாய்ப்பை விட வேண்டாம்.. காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.. எச்சரித்த மூத்த தலைவர்கள்!
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தேசிய தலைவர் சோனியா காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை. அங்கு ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பை பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளும் நழுவவிட்டுவிட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கு ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறது.
இதை ஏற்றுக்கொள்ளாத அம்மாநில ஆளுநர் பகத் சிங், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரை செய்தார். நேற்று மாலை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்கு வந்தது. இதற்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
கர்நாடகா.. 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் கதி என்ன? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
மாநில தலைவர்
இந்த நிலையில் நேற்று முழுக்க காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர்கள் தேசிய தலைவர் சோனியா காந்தியை கடுமையாக எச்சரித்துள்ளனர். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், பிரித்திவிராஜ் சவான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சோனியா காந்திக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுத்துள்ளனர்.
நல்லது
அதில், சிவசேனா உடன் கூட்டணி வைப்பதுதான் நல்லது. அப்போதுதான் நாம் மகாராஷ்டிராவில் முன்னேற முடியும். ஆட்சியில் இருந்தால் பாஜகவை ஓரம்கட்டி மீண்டும் நமக்கான தொண்டர்களை பெற முடியும். அதிகாரம் தேவை. இது நல்ல வாய்ப்பு இதை விட கூடாது.
அழியும்
சிவசேனாவுடன் கொள்கை ரீதியாக நமக்கு நல்ல ஒற்றுமை கிடையாது. ஆனால் அதை பார்க்க வேண்டிய நேரம் இது கிடையாது. நாம் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தவற விட்டோம் என்றால், காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும், என்று எச்சரித்துள்ளனர்.
எதிர்ப்பு தெரிவித்தனர்
ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களாக இருக்கும் கேசி வேணுகோபால், ஏ கே ஆண்டனி ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவசேனா ஒரு இந்துத்துவா கட்சி. அவர்களும் பாஜக மாதிரிதான். அவர்களுடன் சேர்வது மிக மிக தவறு. கர்நாடகாவில் நடந்தது போல ஆட்சி பாதியில் கவிழும்.
தேர்தலை சந்திக்கலாம்
நாம் பொறுமையாக தேர்தலை சந்திக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் சோனியா காந்தி கடுமையாக குழப்பம் அடைந்துள்ளார். இதனால்தான் சோனியா காந்தி கடந்த இரண்டு நாட்களாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வந்தார் என்கிறார்கள்.
நிலைப்பாடு
தேசியவாத காங்கிரஸ் இதில் நிலைப்பாடு எடுக்கட்டும். அவர்களின் கூட்டணிதான் நாம். அவர்கள் உறுதியான நிலைப்பாடு எடுத்தால் நாமும் எடுக்கலாம். அது வரை நாம் பொருத்து இருப்போம் என்று சோனியா காந்தி குறிப்பிட்டு இருக்கிறாராம்.