பெரிய பிரச்சனையாக முடியும்.. பாஜக - சிவசேனாவை எச்சரிக்கும் ஆர்எஸ்எஸ்.. முதல்முறை கருத்து!
பாஜகவும் சிவசேனாவும் மாறி மாறி சண்டை போட்டால் அது இரண்டு கட்சிக்கும் பெரிய பிரச்சனையாக முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பாஜகவும் சிவசேனாவும் மாறி மாறி சண்டை போட்டால் அது இரண்டு கட்சிக்கும் பெரிய பிரச்சனையாக முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நேற்று எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது. ஆனால் நான்கு கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் ஏற்படவில்லை.
முரசொலி அலுவலக விவகாரம்.. உதயநிதிக்கு பதிலாக "அறங்காவலர்" ஆர் எஸ் பாரதி ஆஜர்!
சுத்தமாக விரும்பவில்லை
இந்த நிலையில் சிவசேனா மற்றும் பாஜகவின் பிளவை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இரண்டு கட்சிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மிகவும் நெருக்கம். இதனால் இவர்களின் பிரிவை ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள்.
சமாதானம் தோல்வி
இதனால் அமைச்சர் நிதின் கட்கரி போன்ற முன்னாள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பாஜக மற்றும் சிவசேனா இடையே சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. கடைசி வரை சிவசேனா மற்றும் பாஜக இடையே சமாதானம் ஏற்படவில்லை.
என்ன பேசினார்
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், சுயநலம் மிக மோசமான விஷயம். அரசியலில் சுயநலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அரசியல்வாதிகள் மக்கள் இதை புரிந்து கொள்ளமாட்டார்கள்.
சிலர் விட மாட்டார்கள்
சுயநலம் தவறு என்று தெரிந்தும் சிலர் அதை விடாமல் பிடித்து வைத்து இருப்பார்கள். அவர்கள் இப்படி சண்டை போட்டுகொண்டு இருக்க கூடாது. பாஜக மற்றும் சிவசேனா இப்படியே ஒரு விஷயத்திற்காக சண்டை போட்டால் அது இரண்டு பேருக்கும் பெரிய பிரச்சனையாக முடியும், என்று கூறியுள்ளார்.