மோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்!
பிரதமர் மோடியை எல்லோரும் எதிர்த்த போது அவருக்கு ஆதரவு அளித்து காப்பாற்றியது பால் தாக்கரேதான் என்று சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.
Recommended Video
மும்பை: பிரதமர் மோடியை எல்லோரும் எதிர்த்த போது அவருக்கு ஆதரவு அளித்து காப்பாற்றியது பால் தாக்கரேதான் என்று சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.
அங்கு பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று இரண்டாவது முறையாக அறிவித்துவிட்டது. அங்கு தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுடன் சேரவும் சிவசேனா முயன்று வருகிறது.
4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா!
மீண்டும் சண்டை
இந்த நிலையில் பாஜகவை விமர்சனம் செய்து சிவசேனா கட்டுரை வெளியிட்டுள்ளது. சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சமனா பத்திரிக்கையில் பாஜகவிற்கு எதிராக கட்டுரை வெளியாகி உள்ளது . இதனால் பாஜக சிவசேனா இடையே பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது.
பாஜக கூட்டணி
சிவசேனாவின் அந்த கட்டுரையில், பாஜகதான் தேசிய ஜனநாயக கூட்டணி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. நீங்கள் அந்த கூட்டணியில் ஒரு அங்கம் அவ்வளவுதான். எங்களை கூட்டணியில் இருந்து நீக்குவது பற்றி ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியை அழைத்து பாஜக பேசவில்லை.
உங்களுக்கு பயம்
உங்களுக்கு சிவசேனா பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் பேச பயம். பாஜக நிதிஷ் குமார் உடனும், மெகபூபா முப்தி உடனும் சேரும் போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் அனுமதியே கேட்டது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜக எப்போதும் பொருட்டாக மதித்தது கிடையாது.
மோடி ஆதரவு
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் எல்லோரும் மோடியை எதிர்த்தனர். ஆனால் பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார். அதை அவர்கள் மறந்துவிட்டனர். பாஜகவினர் நன்றி கெட்டு சுற்றுகிறார்கள்.
உங்கள் அரசியல்
நீங்கள் அரசியலுக்கு வரும் முன்பே நாங்கள் அரசியல் செய்தோம். உங்களுக்கு இந்துத்துவா என்றால் என்ன என்று தெரியும் முன்பே நாங்கள் இந்துத்துவா அரசியல் செய்தோம். உங்களின் அரசியலுக்கு நாங்கள்தான் முன்னோடி என்பதை மறக்க வேண்டாம், என்று சிவசேனா கட்சி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.