கொரோனா அறிகுறியா? இடது கையில் அழியாத மையுடன் அடையாள முத்திரை- மகா. அரசு நடவடிக்கை
மும்பை: கொரோனா அறிகுறி இருப்பவர்களின் இடது கையில் அடையாள முத்திரை குத்தும் நடவடிக்கையை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா அறிகுறி இருப்பவர்களை அடையாளம் காண அவர்களின் இடது கையில் முத்திரையிடப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியுள்ளார்.
வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் அடையாள மை மூலம் இந்த முத்திரை கைகளில் இடப்படும். இது 14 நாட்களுக்கு அழியாமல் இருக்குமாம். இப்படி முத்திரை இடப்படுகிறவர்கள் தங்களை தனிமைப்படுத்துவது அவசியம்.
இந்த முத்திரையுடன் பொது இடங்களுக்கு அவர்கள் வரும் போது மக்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று ராஜேஷ் கூறியுள்ளார். ஆனாலும் மகாராஷ்டிரா அரசின் நடவடிக்கை சர்ச்சையாகி உள்ளது.