அமித் ஷாவிற்குத்தான் திறமை இருக்கே.. ஆட்சியை பிடிங்க பார்க்கலாம்.. சவால் விடும் சரத் பவார்!
மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க அமித் ஷா என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க அமித் ஷா என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா என்னும் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு பாஜக பெரிய கஷ்டங்களை அனுபவித்து வருகிறது. முதல்வர் பதவி கொடுத்தால் ஆட்சிக்கு ஆதரவு தருவோம் என்று வெண்கல சொம்பு கேட்கும் வடிவேல் போல சிவசேனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
ஆனால் நீங்க கேட்டா நிலவை கூட வாங்கி கொடுப்போம், முதல்வர் பதவி மட்டும் கொடுக்க மாட்டோம் என்று பாஜகவும் கண்டிப்பாக இருக்கிறது. இதனால் தேர்தல் முடிந்து இரண்டு வாரம் ஆகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.
என்ன பேட்டி
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அளித்திருக்கும் பேட்டியில், பாஜகவிற்கு தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு மகாராஷ்டிராவில் இடம் இல்லை. அதேபோல்தான் சிவசேனாவும். அவர்களுக்கு ஆட்சியை பிடிக்க போதுமான இடங்கள் கிடையாது.
இரண்டு கட்சியும்
இரண்டு கட்சியும் மகாராஷ்டிராவில் 170 இடங்களை தனியாக பெற முடியாது. ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இவர்கள் தனிப்பெரும்பான்மை பெற முடியும். சிவசேனா என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.
சேர மாட்டோம்
நாங்கள் அவர்களுடன் சேர மட்டோம் என்று முன்பே கூறிவிட்டோம். எங்களுக்கு அந்த விருப்பம் கிடையாது. அமித் ஷா பெரும்பான்மை இல்லாமலே பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருக்கிறார்.
என்ன செய்வார்
மகாராஷ்டிராவில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அவர் திறமையானவர் என்று கூறுகிறார்கள். அவர் தனது திறமையை வைத்து மகாராஷ்டிராவில் எப்படி ஆட்சியை பிடிக்கிறார் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன், என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.