மகாராஷ்டிராவை. 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். மோகன் வைத்யா மீண்டும் வலியுறுத்தல்
மும்பை: மகாராஷ்டிராவை 4 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மோகன் வைத்யா மீண்டும் வலியுறுத்தியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
மகாராஷ்டிராவை விதர்பா, மரத்வாடா, கொங்கண் மற்றும் மேற்கு மகாராஷ்டிரா என 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்பதை நீண்டகாலமாக மோகன் வைத்யா வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது.
தற்போது மோகன் வைத்யா, இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாக கட்டா நியூஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது என மகாராஷ்டிரா அமைச்சர் ஜிதேந்திரா அவாது கூறியுள்ளார்.
RSS ideologues MG Vaidya stirred the controversy demanding division of Maharashtra into four states 1. Vidarbha 2. Marathwada 3. Konkan along with Mumbai 4. Western Maharahtra. @Awhadspeaks opposed this division of Maharashtra plan saying Maharahtra was one & will remain United
— KattaNews (@katta_news) January 12, 2020
இது தொடர்பாக அவர் கூறுகையில், மகாராஷ்டிரா ஒரே மாநிலமாகத்தான் இருக்கும். இதை 4 மாநிலங்களாக பிரிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.