மகாராஷ்டிராவில் அடுத்து என்ன? காங்கிரசுடன் இன்று என்சிபி ஆலோசனை.. எகிறும் எதிர்பார்ப்பு!
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை நடத்த உள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை நடத்த உள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, அம்மாநில ஆளுநர் பகத் சிங் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து இருக்கிறார். அங்கு ஆட்சி அமைக்க முடியாது, எங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்று பாஜக கூறிவிட்டது.
அதேபோல் சிவசேனாவும் ஆட்சி அமைக்க கூடி வந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டது. இதனால் எல்லோரின் கவனமும் தேசியவாத காங்கிரஸ் பக்கம் திரும்பி உள்ளது.
சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்!
ஆளுநர் அழைப்பு
இந்த நிலையில் ஆளுநர் அழைப்பு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சி சார்பாக பேசிய மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல், கவர்னர் எங்களை அழைப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்த அழைப்பை தொடர்ந்து நாங்கள் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டோம்.
காங்கிரஸ் கட்சி
இன்று நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை செய்வோம். அவர்கள் எங்கள் கூட்டணி கட்சி என்பதால் ஆட்சி அமைக்க ஆதரவு தருவார்கள். ஆட்சி அமைக்க என்ன வாய்ப்பு இருக்கிறது என்று இன்று நாங்கள் ஆலோசனையில் முடிவு செய்வோம்.
சிவசேனா எப்படி
சிவசேனா குறித்து காங்கிரஸ் கட்சியுடன் விவாதம் செய்வோம். அவர்களுக்கு கவர்னர் கூடுதல் அவகாசம் கொடுக்கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் தற்போது ஏற்பட்டு இருக்கும் சூழ்நிலை மிகவும் துரதிஷ்டவசமானது என்று ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ்
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே இன்று நடக்கும் ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படும். அங்கு ஆட்சி அமையுமா? குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வருமா என்று இன்று தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.