கிளீன் போல்ட்.. இதெப்படி இருக்கு.. நிதின் கட்கரியை நக்கலடிக்கும் என்சிபி!
Recommended Video
மும்பை: "அரசியலும், கிரிக்கெட்டும் எப்போதுமே கணிக்க முடியாதவை" என்று கருத்து தெரிவித்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நக்கலடித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனது பதிலடி மூலம்.
பட்னவீஸ் அதிரடியாக சனிக்கிழமை காலையில் முதல்வராகப் பதவியேற்றார். அதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த நிதின் கட்கரி. "அரசியலும், கிரிக்கெட்டும் கணிக்க முடியாதவை. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று கூறியிருந்தார்.
இதற்குத்தான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் நவாப் மாலிக் நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இப்ப கிளீன் போல்ட் ஆகிட்டீங்களே என்று கூறி கிண்டலடித்துள்ளார்.
இதுகுறித்து நவாப் மாலிக் போட்டுள்ள டிவீட்டில், "சரத்பவார் ஐசிசி தலைவராக இருந்தவர் என்பதை கட்கரி மறந்து விட்டார். இதுதான் கிளீன் போல்ட்.. கட்கரி உணரட்டும்" என்று கூறியுள்ளார் மாலிக்.
மீண்டு(ம்) வந்த அண்ணன் அஜித்பவாரை கட்டி தழுவி வரவேற்ற சுப்ரியா சுலே.. பட்னவீஸுக்கும் உற்சாக வரவேற்பு
அது மட்டுமல்லாமல், பாஜகவின் அழிவு மகாராஷ்டிராவிலிருந்து தொடங்கியுள்ளதாகவும் மாலிக் காட்டமாக கூறியுள்ளார். மொத்தத்தில் மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வுகளால் ஒட்டுமொத்த நாட்டிலும் பாஜகவினருக்கு பெரும் தர்மசங்கடமே கிடைத்துள்ளது.