மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது- ஒரே நாளில் 25 பேர் மரணம்; 200 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று நோயால் பலியானோர் எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 25 பேர் பலியாகினர். மேலும் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அ திகமாக உள்ளது. கேரளாவில்தான் கொரோனாவின் தாக்கம் முதலில் தொடங்கியது.

Maharashtra reports over 200 new cases, 25 deaths

பின்னர் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியது. தற்போது கேரளாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் கொரோனா உக்கிரமாக தாக்கி வருகிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 1364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர்.

தாய்லாந்து பயணியின் மரண வாக்குமூலம்.. ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. எப்படி பரவியது? தாய்லாந்து பயணியின் மரண வாக்குமூலம்.. ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. எப்படி பரவியது?

இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே கொரோனா உயிரிழப்பு அதிகம் நிகழ்ந்துள்ள மாநிலம் இது.

ஆனால் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரப்படி இந்தியாவில் கொரோனாவுக்கு 227 பேர் பலியாகி உள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 99 பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது. மும்பையில்தான் மிக அதிகபட்சமாக 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக புனேவில் 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்கிறது.

English summary
200 new cases of coronavirus were reported in Maharashtra on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X