மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்தாலும் கூட சிவசேனா கட்சி ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியை பெறாது என்று தேசியவாத காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.

Google Oneindia Tamil News

மும்பை: தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்தாலும் கூட சிவசேனா ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியை பெறாது என்று தேசியவாத காங்கிரஸ் தரப்பு கூறுகிறது

மகாராஷ்டிரா அரசியலில் பிரச்சனை இப்போதைக்கு முடியுமா என்று தெரியவில்லை. அங்கு ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பை பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளும் நழுவவிட்டுவிட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நேற்று எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் சிவசேனா 5 வருடம் முதல்வர் பதவியை கேட்டு ஆலோசனை செய்து வருகிறது.

மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு!மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு!

கூட்டணி வைப்போம்

கூட்டணி வைப்போம்

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்தாலும் கூட சிவசேனா ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியை பெறாது என்று தேசியவாத காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. எங்கள் கூட்டணியிலும் அவர்களுக்கு பாதி வருடம்தான் முதல்வர் பதவி கிடைக்கும். நாங்களும் அதிக இடங்களை பெற்று இருக்கிறோம்.

எத்தனை வருடம்

எத்தனை வருடம்

அதனால் எங்களால் விட்டு கொடுக்க முடியாது. இரண்டரை வருடங்கள் எங்கள் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். அவர்கள் பாஜகவுடன் சண்டை போட்டதே இரண்டரை வருடம் முதல்வர் பதவி வேண்டும் என்றுதான். அதனால் நாங்களும் இரண்டரை வருடம் மட்டுமே விட்டுக்கொடுப்போம், என்று என்சிபி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இதையடுத்து சிவசேனா மூத்த தலைவர் எம்பி சஞ்சய் ராவத் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், சிவசேனா தலைமையிலான ஆட்சி விரைவில் மகாராஷ்டிராவில் அமைய போகிறது. நாங்கள் நிலையான ஆட்சியை தருவோம். இரண்டு நாட்கள் மட்டும் பொறுத்திருங்கள்.

காலம் தாழ்த்த வேண்டாம்

காலம் தாழ்த்த வேண்டாம்

அதேசமயம் இரண்டு நாட்களுக்கு பிறகும் நாங்கள் காலம் தாழ்த்த மாட்டோம். எல்லா பேச்சுவார்த்தையும் விரைவில் முடிய வேண்டும். இதற்கு மேலும் நாங்கள் பொறுமையாக இருக்க மாட்டோம். நல்ல முடிவிற்காக காத்து இருக்கிறோம் என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Maharashtra: Shiv Sena won't give full CM post for full-term says NCP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X