மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!
மும்பை: மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் சமபலத்துடன் காணப்படுகின்றன.
மாவட்டங்களுக்கு ஏற்ப அங்குள்ள மக்கள் மத்தியில் கட்சிகள் பெற்றிருக்கும் செல்வாக்குகளுக்கு ஏற்ப வெற்றி தோல்வி முடிவுகள் அமைந்திருக்கின்றன.
கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 880 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் பாஜக 3,000-க்கும் குறையாத பஞ்சாயத்துக்களை கைப்பற்றியுள்ளது.

இதேபோல் அதற்கு சற்றும் சளைக்காத வகையில் சிவசேனாவும் கணிசமான பஞ்சாயத்துக்களை கைப்பற்றி பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இரண்டாயிரத்து 800 பஞ்சாயத்துக்கள் வரை சிவசேனா கைப்பற்றியுள்ளது. மற்றொரு பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாயிரத்து 700-க்கும் குறையாமல் பஞ்சாயத்துக்களை வென்றிருக்கிறது.
இந்த முடிவுகள் அனைத்தும் இரவு 11 மணி நிலவரப்படி மட்டுமே. இன்னும் முடிவுகள் வெளியாகி வருவதால் தேர்தல் நடைபெற்ற 14,234 கிராம பஞ்சாயத்துகளில் எந்தக் கட்சி அதிக இடங்களில் கைப்பற்றும் என்ற விவரத்தை தற்போது விவரிக்க இயலாது.
ஆனால் இந்த மூன்று கட்சிகளுக்கு இடையே பெரியளவில் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காங்கிரஸ் 1905 பஞ்சாயத்துகள் வரை தான் இதுவரை வென்றிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் முடிவுகளை அறிவித்து வருவதால் அந்த எண்ணிக்கை இன்னும் சற்று உயரக்கூடும் எனத் தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications