ரூ.8-க்கு வெங்காயம் விற்பனை.. விரக்தியில் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்ட மகாராஷ்டிர விவசாயி!
Recommended Video
மும்பை: வெங்காயத்தை கிலோ ஒன்று ரூ 8-க்கு விற்பனை செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குலுங்கி குலுங்கி அழுதார்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் அதன் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. கிலோ வெங்காயம் ரூ 100- வரை விற்கப்பட்டது.
இன்று வரை கிலோ 60 முதல் 80 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயம் பற்றாக்குறையால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசு முயற்சிக்கிறது. ஆனால் உள்ளூர் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுப்பதில்லை.
This is so heartbreaking!
— Sunil Ahire (@SunilAh64145529) November 10, 2019
A poor farmer from Ahmednagar, #Maharashtra got a measly Rs 8/kg for his onion produce. He is devastated & doesn't know how he is going to pay labourers or feed his family.
This is what the man busy trying to save his CM's chair has done for farmers! pic.twitter.com/Zv8sZHMUkw
இந்த நிலையில் அகமத்நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ 8 க்கு விற்பனை செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் வெங்காயத்தை உற்பத்தி செய்ய மழையிலும் குளிரிலும் வேலையாட்கள் பணி செய்தனர்.
அவர்களை நான் எப்படி சமாளிப்பேன். என் குடும்பத்தை எப்படி நான் காப்பாற்றுவேன். விவசாயிகளுக்கு அரசு எதையும் செய்யவில்லை என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.