மும்பையில் பயங்கர தீ விபத்து.. கட்டடத்தில் சிக்கியவர்களில் 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அம்மாநில அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு துறை கட்டடத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த கட்டடத்திற்குள் இருந்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பந்த்ரா மேற்கு பகுதியின் எஸ்வி ரோட்டில் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான எம்எடிஎன்எல் தொலைத்தொடர்பு துறை அலுவலகம் செயல்படுகிறது.
இங்கு 3வது மற்றும் 4 மாடியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டடத்திற்குள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
தீ விபத்து நடந்த இடத்திற்கு 14 தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் கட்டடத்திற்குள் இருந்து 60க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் பலரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.