மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொய் கல்யாணம் செய்து பலாத்காரம் செய்த கயவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு கொடூரன். பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மும்பை: கல்யாணம் செய்துக்கலாம் வா என்று கூட்டிப்போய், ஒப்புக்கு தாலி கட்டி விட்டு ஹோட்டலில் ரூம் போட்டு பலாத்காரம் செய்து விட்டு எதையும் வெளியில் சொல்லி விடாதே என்று எச்சரித்திருக்கிறான் ஒரு கயவன். மும்பை அருகே ஜோகேஸ்வரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இளம் பெண்ணை ஏமாற்றிய நபரின் பெயர் ராஜேஷ் படேல் என்பதாகும். 42 வயதாகும் அந்த நபர் ஜோகேஸ்வரியில் உள்ள பிரிண்டிங் பிரஸ்சில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தான். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதே அச்சகத்திற்கு சென்றுள்ளான். அப்போதுதான் அந்த பெண்ணை பார்த்தான்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பார்க்க அழகாக லட்சணமாக இருந்த அவளை எப்படியாவது அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தான் ராஜேஷ். பல வழிகளிலும் முயற்சி செய்தும் முடியவில்லை. அந்த பெண்ணும் பிடி கொடுக்கவில்லை.

வாலிபர் உயிருடன் எரித்துக்கொலை - தேனியில் பயங்கர சம்பவம் வாலிபர் உயிருடன் எரித்துக்கொலை - தேனியில் பயங்கர சம்பவம்

போலி திருமணம்

போலி திருமணம்

தாலி கட்டினால்தான் மத்தது எல்லாமே என்று அந்த பெண் பிடிவாதமாக கூறவே, போலியாக திருமணம் செய்து கொள்ள நினைத்தான். யாருக்கும் தெரியாமல் தாலி கட்டிக்கொண்டு ஜோலியை முடித்து விடலாம் என்று திட்டம் போட்டான் ராஜேஷ்.

நாள் குறித்த ராஜேஷ்

நாள் குறித்த ராஜேஷ்

இதற்காக திட்டம் போட்ட ராஜேஷ், விடுமுறை நாளில் வேலை இருப்பதாக கூறி வீட்டில் பொய் சொல்லி வரச்சொன்னான். அந்தப் பெண்ணும் அப்படியே சொல்லி விட்டு ராஜேஷ் உடன் பைக்கில் ஏறி சென்றாள். வண்டி நேராக தானேவில் உள்ள வஜ்ரேஸ்வரி கோவிலுக்கு சென்றது. அங்கே அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான். நமக்கும் திருமணமாகி விட்டது என்று ஆனந்த கண்ணீர் விட்டாள் அந்தப் பெண்.

ஹோட்டல் ரூமில் சாந்தி முகூர்த்தம்

ஹோட்டல் ரூமில் சாந்தி முகூர்த்தம்

திருமணம் முடிந்த உடன் திட்டமிட்டது போலவே ஹோட்டல் ரூமிற்கு அழைத்துச்சென்றான். அங்கே அந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டான். திருமணம் முடிந்த பின்னர் பெற்றோர் வீட்டில் நடைபெற வேண்டிய சாந்தி முகூர்த்தம் ஹோட்டல் ரூமில் நடந்தைக் கண்டு அழுதாள். அதன் பின்னர்தான் ராஜேசின் சுயரூபம் தெரிந்தது. எதையும் வெளியில் சொல்லக்கூடாது என்று கூறினான்.

 அழுது துடித்த அந்த பெண்

அழுது துடித்த அந்த பெண்

ராஜேசில் நடவடிக்கை திடீர் மாற்றம் ஏற்பட்டதை பார்த்தாள். தான் ஏமாற்றப்பட்டதை அப்போதுதான் உணர்ந்த அந்த பெண், வீட்டிற்குப் போன உடன் நேராக தனது அப்பாவிடம் போய் நடந்ததை கூறினாள். தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் கூறி அழுதாள்.

ராஜேஷ் கைது

ராஜேஷ் கைது

அந்தப் பெண்ணின் பெற்றோர் நேராக போலீசில் புகார் கூறினர். மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி விட்டதாகவும் ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டும் என்றும் கூறினார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

English summary
According to the police, the arrested accused is identified as Rajesh Patel. he accused worked in the same printing press company that the victim worked in. he told her he would marry her as he wants to settle down with her
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X