எய்ட்ஸ் நோயாளியை ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன் - மும்பை சியான் மருத்துவமனையில் பயங்கரம்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்தும் பலாத்காரம் செய்துள்ளான் ஒரு காமுகன். மும்பையில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மும்பை: எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண் என்று கூறியும் துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளான் ஒரு காமுகன். வார்டுபாய் போல நடித்து சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி அந்த பெண்ணை சீரழித்திருக்கிறான்.
மும்பையில் உள்ள லோகமான்ய திலக் முனிசிபல் மருத்துவமனையில் சிறுநீராக கோளாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஒரு பெண். அவருக்கு உதவி செய்வதற்காக அவரின் சகோதரியும் உடன் இருந்தார். வார்டு பாய் போல இருந்த ஒருவன், அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார்.
தான் ஒரு எச்ஐவி நோயாளி என்றும் தானும் சிசிக்சை பெற விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் தான் அழைத்து செல்வதாக கூறி மருத்துவமனையில் மேல்மாடிக்கு அழைத்துச்சென்று சீரழித்து விட்டான்.
ஆட்டோ டிரைவருடன் மகள் காதல்! ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை
எய்ட்ஸ் நோயாளியான தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் அவன் விடவில்லை என்று சியான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு நிறைந்த சியான் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா, செக்யூரிட்டிகளின் பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் டீன் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.
பலாத்காரம் செய்தவனை கண்டுபிடித்து கைது செய்த மும்பை காவல்துறையினர் அவனுக்கும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறாதா? என்று எச்ஐவி டெஸ்ட் பரிசோதனை செய்துள்ளனர். வீட்டில், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லையே என்பது வேதனை தருகிறது.