மும்பையில் அம்பேத்கரின் 'ராஜ்க்ருஹா' இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்-விசாரணைக்கு உத்தரவு
மும்பை: மும்பையில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த 'ராஜ்க்ருஹா' இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கர் வசித்து வந்த 'ராஜ்க்ருஹா' இல்லம் அமைந்துள்ளது. இதன் கீழ் தளத்தில் அம்பேத்கர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
இதில் அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு தளத்தில் அம்பேத்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வீட்டின் முன்பகுதியை சேதப்படுத்தி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து அம்பேத்கர் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
அண்ணல் அம்பேத்கரின் இல்லம் சேதப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிரா மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அபாயம்!