மும்பையில் கடற்படை கப்பலில் திடீர் வெடி விபத்து.. 3 வீரர்கள் பரிதாப பலி
மும்பை: மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெடிவிபத்து ஏற்பட்ட போது மும்மை கடற்படை தளத்தில் ரன்வீர் கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்பு தேவைக்காக வெடிபொருள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதில் திடீரென தீ பிடித்துள்ளது.
இதனால் மளமளவென வெடிபொருளில் தீ பரவி பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. வெடி பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் பற்றி கேட்டதும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர்.
ஆனாலும் தீ விபத்து ஏற்பட்ட கூடத்தில் சிக்கி இருந்த 3 பேர் அங்கேயே காயங்களுடன் மயக்கம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேரின் சடலங்களும் பெரும் போராட்டத்திற்கு பின்பே மீட்கப்பட்டது.
மூன்று பேர் பலியான நிலையில் அங்கே இருந்த கடற்படை கருவிகள் எதற்கும் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து உண்மையில் எதனால் ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
வெடி விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
2 நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த கொரோனா.. தமிழ்நாட்டில் உயர்ந்த கேஸ்கள்.. இன்றைய நிலவரம்!