அடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு
பக்கத்து வீட்டுப் பெண்களை ஓரக்கண்ணால் ரசித்தாலே கிராமங்களில் வெட்டுக்குத்து நடக்கிறது. இங்கே பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை செல்போனில் ரகசியமாக படம் பிடித்த இளைஞரை
மும்பை: பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக அடுத்தவன் மனைவியை ரசிப்பது, பாத்ரூமில் எட்டிப்பார்ப்பது என பாலியல் ரீதியாக பல சீண்டல்களை பெண்களுக்கு செய்து துன்புறுத்துகின்றனர். டாக்ஸி டிரைவர் ஒருவர் அடுத்தவர் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து ஆசை தீர ரசிக்க நினைத்துள்ளார். பிடிபட்ட அவர் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
பாத்ரூம் சுவரில் ஓட்டை போட்டு காதலிக்கு சோப்பு போட ஆசைப்பட்ட விஜய் கடைசியில் தனது மாமியார் முதுகுக்கு சோப்பு போடும்படி ஆகிவிடும். மும்பையிலோ ஒரு நபர் பாத்ரூமில் ஓட்டை போட்டு செல்போனை வைத்து படம் எடுக்க நினைத்து மாட்டிக்கொண்டார்.
மும்பை புறநகர் பகுதியான ஓஸிவாராவில் வசித்து வருகிறார் சதாம் சாயிக். டாக்ஸி டிரைவரான இவரது வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் இடையே பொதுச்சுவர் உள்ளது. பக்கத்து வீட்டில் ஒரு இளம் பெண் தனது கணவருடன் புதிதாக குடி வந்தார். அந்த பெண் ஆரம்பத்தில் இருந்தே கண் வைத்த சாதாம், பொது சுவரின் பாத்ரூம் கூரையில் மொபைல் போனை வைத்தார்.
பக்கத்து வீட்டுப்பெண் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்து ரசிக்க வேண்டும் என்ற ஆசையில் மொபைலை வைத்த சதாமிற்கு அந்த பெண்ணின் கணவன் வடிவில் வினை வந்தது. பக்கத்து வீட்டுக்காரன் பார்வையே சரியில்லையே என்று நினைத்த அவர், சுற்றும் முற்றும் பார்த்து பாத்ரூமில் செல்போன் இருந்ததை கண்டுபிடித்தார்.
சண்டைபோட்டு ஊரைக்கூட்டவில்லை நேராக ஓஸிவாரா காவல் நிலையத்தில் போய் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெர்கம் பெக் பகுதியில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்த சதாமை கைது செய்து சிறையில் தள்ளினர். செல்போனை எடுத்து தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாத்ரூமில் குளிக்கும் அடுத்தவன் மனைவிக்கு சோப்பு போட நினைத்தாலே கம்பி எண்ண வேண்டும். வீடியோ எடுக்க நினைத்தால் விடுவார்களா? குற்றம் நிரூபிக்கப்பட்டால் சும்மா தாளித்து விட மாட்டார்கள். இதே வேலையாத்தானய்யா இருக்காங்க.