கல்யாணம் பண்ணலன்னா.. ஓடும் ரயிலில் தள்ளிய காதலன்.. தாய் கண் முன்னே
மும்பை: திருமண விருப்பத்தை ஏற்க மறுத்ததால், ஓடும் ரயில் நோக்கி அப்பெண்ணை தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சுமேத் ஜாதவ் என்பவரும், 21 வயது பெண் ஒருவரும் ஒரே அலுவலகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பணியாற்றி வந்திருக்கின்றனர். அப்போது முதலே இருவருக்கும் நல்ல நட்பு இருந்துள்ளது.
ஆனால், ஜாதவுக்கு குடிப்பழக்கம் இருப்பதை அறிந்த அப்பெண், கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு விலகியிருக்கிறார். எனினும், விடாப்பிடியாக அப்பெண்ணை ஜாதவ் துரத்தி வர, அவர் போலீசிலும் புகார் அளித்திருக்கிறார். புகார் செய்த பிறகு அப்பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, அந்தேரி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய அப்பெண்ணை, ஜாதவ் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். பிறகு, Khar ரயில் நிலையத்தில் இறங்கி தனது தாயிடம் ஜாதவ் பின்தொடருவது குறித்து அப்பெண் கூறியுள்ளார்.
அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய ஜாதவ், பிறகு அப்பெண்ணை தரதரவென இழுத்து, அங்கிருந்து கிளம்பிய ரயிலுக்கும், தண்டவாளத்திற்கும் இடையே பிடித்து தள்ளியிருக்கிறார்.
குஜராத் மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு.. வாக்களித்தார் அமித்ஷா-பாஜக, காங்., ஆம் ஆத்மி பலப்பரீட்சை
இதனால் தலையில் பலத்த காயமடைந்த அப்பெண்ணுக்கு 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பியோடிய ஜாதவை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக மூத்த போலீஸ் ஆய்வாளர் விஜய் கூறியுள்ளார்.