மும்பையில் கொன்று புதைக்கப்பட்ட பிரபல மாடல்.. 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்.. திக் புலனாய்வு!
மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மான்சி தீக்ஷித் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
Recommended Video
மும்பை: மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மான்சி தீக்ஷித் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மும்பையை சேர்ந்தவர் மான்சி தீக்ஷித். 20 வயது ஆகும் இவர் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதே போல சில பாலிவுட் படங்களிலும் சைட் ரோலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று இவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த நபரை போலீசார் 2 மணி நேரத்தில் பிடித்து இருக்கிறார்கள்.
கமல்ஹாசனை பார்த்து இப்படி சொல்லிட்டாரே ராஜேந்திர பாலாஜி!
ஒன்றாக இருந்தனர்
மான்சி தீக்ஷித் மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த முஸாம்மில் சையத், பேஸ்புக் மூலம் இந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்துள்ளனர். 6 மாதமாக இவர்கள் பழகி இருக்கிறார்கள்.
கொலை செய்தார்
இந்த நிலையில், இன்று அதிகாலை மான்சியை சந்திக்க முஸாம்மில் சையத் அவளது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் இவர்கள் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இதில் மான்சியை முஸாம்மில் சையத் கொலை செய்துள்ளார். அதோடு வெட்டி துண்டு துண்டாக கட்டி, சூட்கேசில் அடைத்து இருக்கிறார்.
தப்பித்தார்
பின் டாக்சி பிடித்து அந்த சூட்கேஷை எடுத்துக் கொண்டு மும்பை ஏர்போர்ட் சென்றுள்ளார். பாதி வழியில் மலாத் மைனஸ் ஸ்பேஸ் என்ற காட்டுப்பகுதியில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு, காட்டிற்குள் சென்று சூட்கேஷை புதைத்துள்ளார். அதோடு வேறு பக்கமாக ஓடி தப்பித்து சென்றுள்ளார்.
தகவல் கொடுத்தார்
இவருக்காக காத்திருந்த டாக்சி ஓட்டுநர் சந்தேகம் வரவே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த போலீஸ் மோப்ப நாய் மூலம் தேடி உள்ளது. தேடுதலின் முடிவில் மான்சியின் உடல் கிடைத்தது. இதையடுத்து காட்டை சுற்றி இருந்த அனைத்து கேமராக்களையும் போலீஸ் சோதனை செய்தது.
திக் திக்
அதை வைத்து, முஸாம்மில் சையத் தப்பித்து ஓடிய ஆட்டோவை கண்டுபிடித்தனர். அந்த ஆட்டோ ஓட்டுனரை விசாரித்து முஸாம்மில் சையத் எங்கு இறங்கினார் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் இறக்கிவிடப்பட்ட அந்தேரியில் ஒரு தெருவில் அப்போது இயங்கி கொண்டிருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து சோதனை செய்தனர்.
2 மணி நேரம்தான்
கடைசியில் முஸாம்மில் சையத் வீடு ஒன்றுக்குள் செல்வதை கண்டுபிடித்தனர். உடனே அங்கு போலீஸ் சென்றது. 2 மணி நேரத்தில் அவனை போலீசார் பிடித்தனர். போலீசிடம் முஸாம்மில் சையத் கொலை செய்ததை ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.