மும்பையை உலுக்கும் பேய் மழை.. 30 விமானங்கள் ரத்து, 118 விமானங்கள் தாமதம்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இடைவிடாத கனமழை காரணமாக 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 118 விமானங்கள் தாமதமாக சென்றன. மும்பையில் மழையால் ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த செவ்வாய்கிழமை முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8:30 மணி வரை 217.4 மில்லி மீட்டர் மழை மும்பையில் பெய்துள்ளது.
இதன் காரணமாக மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால் மும்பையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ப.சி கதை ஓவர்.. டி.கே.எஸ்ஸும் சிக்கிவிட்டார்.. அடுத்து ராகுல் காந்திதான்.. அமித் ஷா போடும் கணக்கு!
பச்சை எச்சரிக்கை
வியாழக்கிழமையான இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான நாளை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பச்சை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
118 விமானங்கள் தாமதம்
இந்த வெள்ள பாதிப்பு காரணமாக மும்பையில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.118 விமானங்கள் தாமதாக சென்றன.
வெள்ளத்தால் 3பேர் சாவு
மும்பையில் மழை பாதிப்பு காரணமாக இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் 7வயது சிறுவன் ஆகியோர் வெவ்வேறு சம்பவங்களில் இன்று உயிரிழந்தனர்.
இயல்நிலையில் ரயில்சேவை
மும்பையின் முக்கிய ரயில் வழித்தடமான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து தானே செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில்சேவைகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளன. இதனால் மும்பையில் ரயில் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.