மும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை.. ரயில்கள் தாமதம்.. ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிப்பு
Recommended Video
மும்பை: மும்பையின் பல பகுதிகளில் இரவில் பெய்த மழையால் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக இயங்கி வருகின்றன.
கடும் மழை எச்சரிக்கையால், நகரில் உள்ள பள்ளிகளில் விடுமுறை அறிவித்துள்ளனர் அதிகாரிகள்.
கனமழை முதல் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பைக்கு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம், எச்சரித்ததை அடுத்து, பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.
பலத்த மழையால் இன்று காலை ரயில்கள் தாமதமாக இயங்கின. "பலத்த மழை மற்றும் விஷன் குறைவாக இருப்பதால், பிரதான புறநகர் ரயில்கள் 10-12 நிமிடங்கள் தாமதமாகவும், துறைமுக லைன் ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாகவும் இயங்குகின்றன" என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் சேர்ந்துள்ளது. எனவே ரயில்களின் இயக்க வேகம் குறைந்தன. மேற்கு ரயில்வே வெளியிட்ட ட்வீட் ஒன்றில் கூறியது: "நல்லசோபரா ஃபாஸ்ட் லைன்களில் 120 மிமீ தடங்களுக்கு மேல் நீர் மட்டம் எட்டியுள்ளதால், நீண்ட தூர ரயில்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. புறநகர் தடைசெய்யப்பட்ட வேகத்தில் இயக்கப்படுகின்றன." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளன.
KINDLY NOTE - VIRAR- DUE TO POINT FAILURE SINCE 9.16 HRS ON DOWN SLOW AND UP FAST LINE, TRAINS BEING REVERSED FROM VASAI ROAD & BHAYANDER. WATER LOGGING REPORTED DUE TO HEAVY RAIN AT VIRAR. @drmbct #WRUpdates @RailMinIndia pic.twitter.com/3hWkALLISI
— Western Railway (@WesternRly) September 4, 2019
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை விமான போக்குவரத்து இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை. "10-15 நிமிடங்கள் சிறிய தாமதங்களுடன் விமானங்கள் இயக்கப்படுகின்றன" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.