ஆர்யன் கான் நிரபராதி.. சொகுசு கப்பலில் போதை பார்ட்டி வழக்கில் என்சிபி அறிக்கை- இதுவரை நடந்தது என்ன?
மும்பை : சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவர் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மும்பை - கோவா சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில் ஆர்யன் கான் குற்றமற்றவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதை பார்ட்டி
கடந்த 2021 அக்டோபர் 2ஆம் தேதி மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிஸாரும் இந்த கப்பலில் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டனர். கப்பல் நடுக்கலை நெருக்கியபோது சிலர் கொக்கைன், உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ஆர்யன் கான்
இதையடுத்து, அந்த கப்பலில் போதைப் பொருட்களை அதிரடியாக கைப்பற்றினர். சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்ய்யப்பட்ட வழக்கில், இந்த கப்பலில் இருந்த நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் பின்னர் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சர்ச்சைகள்
இந்த வழக்கில் ஆர்யன் கான், ஷாருக் கானை பழிவாங்கும் விதமாக வேண்டுமென்றே திட்டமிட்டு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் அலையடித்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மரணமடைந்தார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிகள் டெல்லியிருந்து வந்து பிரபாகரிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டுச் சென்ற சில நாட்களில் அவர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

குற்றப்பத்திரிக்கை
இந்த வழக்கு தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு 6,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கைது செய்யப்பட்ட 20 பேரில் ஒருவரான 23 வயதான ஆர்யன் கான் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. மேலும் 5 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்யன் கான் நிரபராதி
ஆர்யன் கான் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நிரபராதி என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தங்கள் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications