சாலைகளில் பார்த்திராத வெள்ளம்.. நீச்சல் தெரிஞ்சவங்க மட்டும் வெளியே வாங்க.. கிலி கொடுக்கும் வீடியோ
மும்பை: மும்பையில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை இதுவரை பார்த்ததில்லை என்றும் வெளியே வர வேண்டுமானால் நீச்சல் தெரிந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 ஆம் தேதி முதல் மும்பை, ராய்காட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் வைரலாக்கி வரும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் காணலாம்.
சும்மா ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஆடும் தென்னை.. வீட்டில் காட்டாற்று வெள்ளம் போல் பாயும் நீர்
டெலிவரி
மும்பையில் மழை வெளுத்து வாங்கி சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையிலும் கடமையே கண் என நினைத்த உணவு டெலிவரி கொடுக்கும் நிறுவன ஊழியர்கள்.
|
நீச்சல்
கிர்கானில் உள்ள சாலையில் நீச்சல் அடிக்கும் அளவுக்கு சூழ்ந்துள்ள மழை நீர். உங்களுக்கு நீச்சல் தெரிந்தால் மட்டுமே வெளியே வாருங்கள் என்கிறார் இந்த வலைஞர்.
காற்றுடன் கனமழை
மும்பையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது கிரேன் ஒன்று உடைந்து விழுந்தது.
|
மும்பை
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மும்பையில் காற்று வீசியது. இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்படி ஒரு மும்பையை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்கிறார் இந்த வலைஞர்.
மோசமான சாலைகள்
கடந்த 15 ஆண்டுகளில் மும்பையில் நல்லதொரு வளர்ச்சி. மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் என மோசமான சாலைகள் குறித்து அரசை கிண்டல் செய்கிறார்.