வாக்குறுதிகளை நிறைவேத்துங்க.. இல்லன்னா.. மக்கள் உதைப்பாங்க.. யாரை சொல்கிறார் கட்கரி?
Recommended Video
மும்பை: வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தலைவர்களை மக்கள் அடிப்பார்கள் என்று பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறைமுக எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதின் கட்கரி ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், 2014-ம் ஆண்டு தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தோம். ஆனால், தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நினைத்துப்பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பேட்டி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பேச்சு சர்ச்சையானதையடுத்து, அதற்கு கட்கரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந் நிலையில் தற்போது அவர் பேசியுள்ள மற்றொரு பேச்சு பெருத்த சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
|
விழாவில் கட்கரி பங்கேற்பு
மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: அரசியல்வாதிகள் 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் அளிக்க வேண்டும். மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்பமாட்டார்கள், மாறாக தண்டித்து விடுவார்கள்.
வாக்குறுதிகளை தர வேண்டும்
எனவே, 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கு வழங்க வேண்டும். நான் மக்களிடம் எந்தவிதமான பொய்யான வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. நான் கூறியதை 100 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறேன்.
மக்கள் அறிவார்கள்
1994-99 பாஜக, சிவசேனா கூட்டணியில் மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த போது கூட எந்த வாக்குறுதியும் மிகைப்படுத்தி அளிக்கவில்லை. நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும்.
|
எதிர்க்கட்சிகள் பதில்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சியும், ஓவைசி எம்.பி.யும் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக, மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியான ட்விட்டரில் பதில் கூறியுள்ளது. அதில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடியை தாக்கி பேசியுள்ளார். மோடி மக்கள் உங்களை சந்திக்க வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் நிலை
பாஜகவின் நிலையை கண்ணாடி போல நிதின் கட்கரி பிரிதிபலிப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. குறிப்பாக, நிறைவேற்ற கூடிய வாக்குறுதியை மட்டும் மக்களிடம் அரசியல்வாதிகள் அளிக்க வேண்டும், இல்லா விட்டால், மக்களால் தூக்கி எறியப்படுவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த எச்சரிக்கை பிரதமர் மோடிக்கு தானே என்று காங்கிரசும் கிண்டல் செய்துள்ளது.