தண்டவாளத்தில் விழுந்த குழந்தை... கண நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்.. திக் திக் வீடியோ வைரல்
மும்பை: ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை விபத்தில் இருந்து கண நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பரவல் காணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்திலுள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடியே காணப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் வாங்கனி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை ரயில்வே ஊழியர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அங்கு உள்ள 2ஆம் எண் நடைமேடையில் பெண் ஒருவர், தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
தாயின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த குழந்தை, திடீரென்று நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அப்போது அந்த தண்டவாளத்திலேயே ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
மீண்டும் கொரோனா ஊரடங்கு? ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில்... குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இதனால் பதறிய அப்பெண் குழந்தையை மேலே தூக்கப் போராடிக் கொண்டிருந்தார். 144 தடை உத்தரவு காரணமாக ரயில் நிலையத்திலும் யாரும் இல்லை. அப்போது நல்வாய்ப்பாக எங்கிருந்தோ ஓடி வந்த மயூர் ஷெல்கே என்ற ரயில்வே ஊழியர், குழந்தையை சரியான நேரத்தில் பிளாட்பாரத்தில் தூக்கிவிட்டார்.
Salute to the courage of pointsman in Mumbai Division Mayur Shelkhe who saved life of a child who lost his balance while walking at platform.@ActorMadhavan @rajeev_mp @IshitaYadav @ipspankajnain @ipskabra @sonalkalra @sonalgoelias @RandeepHooda @DeepaAthlete @PiyushGoyal @jkd18 pic.twitter.com/ak1R4SDlbP
— IMShubham (@shubham_jain999) April 19, 2021
குழந்தை மேலே ஏற்றிவிட்டு, அவரும் பிளாட்பாரத்தில் ஏறிய மறுநொடி, அந்த ரயில் படுவேகமாக அந்த இடத்தைக் கடக்கிறது. ரயில்வே ஊழியர் தக்க நேரத்தில் சரியாகச் செயல்பட்டதால் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த திக் திக் வீடியோவை தற்போது ரயில்வே துறை வெளியிட்டுள்ள நிலையில், பலரும் ரயில்வே ஊழியரின் துணிச்சலான செயலை பாராட்டி வருகின்றனர்.